Live Pulse
Kumbakonam:
32°C — Clear Skies
Peaceful Temple Chants
சிவபெருமான் ஆலயம் (சிவதலம்)

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோவில்

Sri Kalahasteeswarar Temple

📍 மடத்து தெரு, கும்பகோணம்🕉️ மூலவர்: காளஹஸ்தீஸ்வரர்🙏 தாயார்/அம்மன்: ஞான பிரகலாம்பிகை, கார்த்தியாயினி🏛️ காலம்: -

தல சிறப்புகள்

பல பெரிய கோவில்களில் ஜுரதேவருக்கு சன்னதிகள் உள்ளன. ஆனால், இந்த கோயிலில் உள்ள ஜுரஹரேஸ்வரருக்கு மூன்று கால்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு கால்களை கீழே ஊன்றியும் ஒரு காலை மட்டும் மடித்தும் இவர் காட்சியளிக்கிறார். எலும்பு, தோல், நரம்பு ஆகியவையே நோய்களுக்கு காரணமாக அமைகின்றன. இம்மூன்றாலும் வரும் நோய்களை குணப்படுத்துவதால் இவருக்கு மூன்று கால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இறைவனுக்கு வெந்நீரால் அபிஷேகம் நடத்தப்படுகிறது.இத்தலத்தில் சிவசூரியன் மேற்கு பார்த்து அமர்ந்துள்ளார். இங்குள்ள நடராஜர் சன்னதியில் மிக அருமையான சிலை இருக்கிறது. அருகில் சிவகாமி அம்பாளும், மாணிக்கவாசகரும் அருள்பாலிக்கின்றனர். மகாமக தீர்த்தவாரி கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

தரிசன நேரங்கள்

🌅

காலை தரிசனம்

6:00 AM to 12:00 PM

☀️

மதிய நடை சாத்துதல்

12:00 PM to 4:00 PM

நடை சாத்தப்பட்டிருக்கும்

🌙

மாலை தரிசனம்

4:00 PM to 8:30 PM

* விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடலாம்.

தல வரலாறு மற்றும் புராணக் கதை

ஆதிசேஷனுக்கும் வாயுபகவானுக்கும் இடையே யார் பலசாலி என்பதில் போட்டி ஏற்பட்டது. மேருமலையை ஆதிசேஷன் பிடித்துக்கொள்ள, வாயுபகவான் அதை அசைக்க வேண்டும் என்பது போட்டி. இந்த போட்டியில் மேரு மலையின் மூன்று சிகரங்கள் பெயர்ந்தன. அவை தென்னாட்டில் வந்து விழுந்தன. அவையே காளத்திமலை, திருச்சிராப்பள்ளி மலை, திரிகோண மலை ஆகியவை ஆயிற்று. இங்கு சிவபெருமான் எழுந்தருளினார். காளத்தீஸ்வரர் என வழங்கப்பட்டது. கும்பகோணம் தீர்த்தநகரம் என்பதால் இங்கும் எழுந்தருளினார். காளஹஸ்தியில் ராகு தோஷத்தை தீர்த்து வைப்பதைப்போல இத்தலத்து காளத்தீஸ்வரரும் ராகுதோஷத்தை தீர்த்து வைக்கிறார். காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்காக தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் இந்தகோவில் அமைக்கப்பட்டது. இத்தலத்து ஞான பிரகலாம்பிகையை தரிசித்தால் காளஹஸ்தியில் வழிபட்ட பலன் கிடைக்கும்.

விழாக்களும் உற்சவங்களும்

கோயில் பெருவிழா

Annual

காலம்: Various

On the day of Makara Sankranti, a divine marriage ceremony is conducted for him. Following this, they display the daily wedding scene. Swami blesses the devotees by circumambulating the Maha Mandapam. During the Rahu Kalam periods, worship is conducted for Durga.

பிரார்த்தனை & வேண்டுதல்

தீராத நோய்களெல்லாம் தீர்வதற்கு இங்கு பிரார்த்திக்கின்றனர்.

அமைவிடம் & வரைபடம்

கும்பகோணம் மடத்து தெருவில், காவிரியின் தென்கரையில் இந்த கோவில் அமைந்துள்ளது.

கூகுள் மேப்பில் வழி காண்க →

📍 கோயில் வழிகாட்டுதல் தேவையா?

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோவில் தரிசன நேரம், பூஜைகள் மற்றும் வழித்தட விவரங்களை வாட்ஸ்அப்பில் அறியுங்கள்.

💬 வாட்ஸ்அப்பில் சேட் செய்க

🏨 அருகில் தங்குவதற்கு விடுதி தேவையா?

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோவில் அருகில் உள்ள தங்கும் விடுதிகள், கட்டணங்கள் மற்றும் அறைகளை உடனே தேடுங்கள்.

விடுதிகள் தேடுக

தல விவரக்குறிப்புகள்

மூலவர்

காளஹஸ்தீஸ்வரர்

தாயார்/அம்மன்

ஞான பிரகலாம்பிகை, கார்த்தியாயினி

காலம்

-

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் — அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோவில்

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோவில் நடை திறக்கும் நேரங்கள் என்ன?+
அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோவில் காலை தரிசனம் 6:00 AM to 12:00 PM மற்றும் மாலை தரிசனம் 4:00 PM to 8:30 PM வரை இருக்கும். மதியம் 12:00 PM to 4:00 PM வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.
அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோவில் எங்கு அமைந்துள்ளது?+
கும்பகோணம் மடத்து தெருவில், காவிரியின் தென்கரையில் இந்த கோவில் அமைந்துள்ளது.
அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோவில் திருத்தலத்தில் பிரதானமாக எந்த தெய்வம் வழிபடப்படுகிறது?+
இங்கு பிரதான தெய்வம் காளஹஸ்தீஸ்வரர். தாயார்/அம்மன் சன்னதி: ஞான பிரகலாம்பிகை, கார்த்தியாயினி.